search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கோலி கோலம்"

    குஜராத் மாநிலம், வதோதரா நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. #Rangoli #VadodaraRangoli
    அகமதாபாத்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் பதிவானது.

    இந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதரா நகரில்  தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.



    மகாராணி சிம்னாபாய் பள்ளியில் ஏக்தந்த் ரங்கோலி கலாக்கர் என்ற குழுவை சேர்ந்த 30 பேர் சுமார் ஐந்தரை மணிநேர உழைப்பில் இந்த மெகா ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. #Rangoli  #VadodaraRangoli 
    ×